செய்தாய் நீ செய்வினை,அதனால் ஆசைகளோ அத்தனை
இதோ வருகிறது ஆசைகளின் வரிசை,
ஏற்றுகொள் இந்த அன்பு பரிசை
நுதல்கள் முட்ட நம் நுனி மூக்கு பேசிக்கொள்ள,
கையில் அணைத்தபடியே உனது விழியில் மூழ்கிவிட ….
சாய்ந்து நிற்கிறேன் நான் , ஒரு கையில் மரக்கிளையை தொற்றிக்கொண்டு,,
கள்ளம்மில்லா புன்னைகையுடன் நீ, என்னை இருக்க பற்றிக்கொண்டு….
மரமோ மலை உச்சியில்…,
ஒரு பக்கம் பாதாளம்,இன்னொரு பக்கம் என் செல்ல வேதாளம் 🙂 …
வேதாளமே இக்கணமே உயிர் போகயேல் உன்னை தழுவிக்கொண்டு இருக்கையிலே
உன்னை தழுவிக்கொண்டே….